திங்கள், ஏப்ரல் 16, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

இலங்கைக்கு எதிரான தீர்மாம் வெற்றி பெற்றது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.

இனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால் இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும் அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப் போதுமானதாகும் மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)

கண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.
இலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.

அப்பாவி தமிழர்களின் மீதான இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்த்த யாருடைய கண்களும் கசியாமல் இருக்காது அதனால் தான் அதைப்பார்க்க சகிக்காமல் கலைஞர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 27-4-2009 அன்று கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் இரண்டு கூலர்களை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்கி விட்டார்.

இன்று கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்துள்ளார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் கூறுகிறார் (அரசியல் கூத்து).

மீண்டும் புலிகள் வரள மாட்டார்களா ?
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மா
னத்தால் மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில்  எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

காரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.

இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.

இது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

அதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்
தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா,சோ உட்பட).

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர் ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக்கினர். அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். 

புலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. 

கொலைவெறியும், இரத்த தாகமும்.
புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள். 

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள். 


தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.


1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கி
டிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட் முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 
 

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.

இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கு
ம் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் டுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில்
மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

பு
லிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.

4:168,169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழி காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

வியாழன், மார்ச் 22, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....




விடுதலைப் புலிகளின் பரினாமம்.

பயங்கரவாதப் புலிகளின் தலைவன் பிரபாகரன் கொல்லப்படடதும் (கொல்லப்படவில்லை என்று ஆனித்தரமாக வைகோவும், நெடுமாறனும் கூறி வருகின்றனர்.) இத்துடன் புலிகளின் அட்டூழியம் ஒழிந்தது அப்பாடா என்று இலங்கை அரசும், அப்பாவி மக்களும் நிம்மதிப் பெருமூச்சி விட்டனர். ஆனால் அது தற்காலிக சந்தோஷம் தான் என்பதை சமீப கால அவர்களின் நவடிக்கை நிரூபித்து வருகிறது. 

தனி ஈழம் கோரும் இலங்கைத் தமிழர்களில் அதிகமானோர் ஆரம்பத்திலிருந்தே செல்வம் கொழிக்கும் ஐரோப்பா நாடுகளில் நிலைக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். அரசுக்கெதிரான கலகத்திலும், அரசு ராணுவத்தினருடனான யுத்தத்திலும் ஈடுபடும் ஒருப் பிரிவனர் மட்டுமே இலங்கை காடுகளில் கட்டமைப்பை எற்படுத்திக் கொண்டு பிரபாகரன் தலைமையில் போரிட்டு வந்தனர். பிரபாகரன் கொல்லப்பட்டு இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் போக மீதமிருப்பவர்களில் ஏராளமானோர் அகதிகள் போல் ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தனி ஈழம் கோரும் பிரிவினைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். 

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியது நினைவிருக்கலாம். இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியது. 

இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல யுளுஐநுளு  எனும் பத்திரிகை அதிர்ச்சித் தகவலை இப்பொழுது வெளியிட்டுள்ளது. 
இதன் முதல் கட்ட முயற்சியாக இலங்கை சிறையில் உள்ள முன்னால் வெளி விவகார தொடர்பாளர் குமரன் பத்மநாதனை விடுவிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். குமரன் பத்மநாதன்  கடந்த 2009ல் தாய்லாந்து அரசால் கைது செய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமரன் பத்மநாதன் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளை  சந்தித்து நிதித் திரட்டியும், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்பை வலுப்படுத்தியும் வந்தவர் என்பதால் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது போல் மீண்;டும் செயல்பட இவரையே தேர்ந்தெடுத்துள்ளனர் அதனால் இவரை விடுவிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது ஒருப் புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டப் புலிகள் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மேற்காணும் கொலை வெறிப் யபிற்சி தமிழ்நாட்டில் முனைப்புடன் நடந்து வருவதாகவும் மேற்காணும் பத்திரிகை செய்தி கூறுகிறது.

இவர்கள் எல்லாம் திருந்தி மனிதர்களாக வாழவேண்டும் என்பதற்காக இவர்கள் கைது  செய்யப்பட்டதும் ஒரு குவான்டனாமோ சிறைப் போல அல்லது அபுகிரைப் சிறைப் போல அல்லாமல் ஏராளமான மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பயங்கரதவாதப் புலிகள் அனைவரையும் அதில் தங்க வைத்து பிரபல தொழில் நிபுனர்களைக் கொண்டு பல்வேறு மாதிரியான தொழிற்பயிற்சிகள் அளிக்கபட்டு ஒவ்வொருவரும் தங்களை சீர்திருத்தி வாழும்படிக் கூறி வெளியில் அனுப்பினார் ராஜபக்சே.

சமீபத்தில் யுத்தம் நடந்த நாடுகளின் வரிசையில் வெற்றி கொல்லப்பட்டவர்கள் எதிரணியிலிருந்து கைது செய்யப்பட்டவர்களை நடத்திய விதத்தில்; புலிகளுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட விதத்தில் ராஜபக்சே மிளிர்கிறார். ஆனால் புலிகளோ மனிதாபிமனாத்திற்கு அப்பாற்பட்டவள் என்பதை கடந்த காலங்களில் பலதடவை நிரூபித்தவர்கள். 

எது எப்படியோ இலங்கைத் தமிழர்கள் அப்பாடா என்று பெரு மூச்சுவிடுவதற்குள் அடக் கடவுளே என்று அலறும் அடுத்த நிலை உருவாகி வருவமு துரதிஸ்டத்திலும் பெரிய துரதிஸ்டம். வைகோ, சீமானுடைய அரசியல் கட்சி இதன் மூலமாக இன்னும் சூடு பிடிக்கலாம். 

 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், டிசம்பர் 26, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...


விஸ்வமடுவில் தமிழர்கள் பாதுகாப்பு முகாமில் பெண் விடுதலைப் புலி மணித வெடிகுண்டு.

விஸ்மடுவில் இலங்கை ராணுவம் அமைத்திருந்த நிராயுதபாணிகளாகிய அப்பாவி தமிழர்களுக்கான பாதுகாப்பு முகாமுக்குள் நேற்றைய தினம் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அதில் ஏராளமான அப்பாவி அகதிகள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர் ஏராளமான மக்கள் தங்களுடைய உடல் உறுப்புக்களை இழந்து தவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பாவி தழிழர்கள் தங்களை புலிகள் பகடைக்காயாகப் பயன் படுத்துவதை அறிந்து அவர்களிடமிருந்து பல்லாயிரக் கணக்கில் வெளியேறி ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலம் புகுந்து வந்தனர்.

இந்தச் செயலைப் பிடிக்காத பயங்கரவாதப் புலிகள் அவர்கள் மீது நடத்திய மாபாதகச் செயல் தான் மேல்படி ரெத்தத்தை உறையச் செய்யும் பெண் மனித வெடிகுண்டு சம்பவமாகும்.

தனி தமிழீழம் அமைப்பதாக கூறியதெல்லாம் பிரபாகரன் குறிப்பிட்ட ஒரு சிலருடைய சுபபோக வாழ்க்கைக்காவே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் புலிகளுடைய தனி தமிழீழக் கோரிக்கை வைப்பதற்கு முன் இலங்கை தமிழர்கள் எந்த வகையிலும் இலங்கை அரசால் புறக்கணிக்கப் படவில்லை இரண்டாம் தர மக்களாக நடத்தப்படவில்லை அரசு உத்தியோகம் முதல், அவர்கள் பேசும் மொழி வரை முக்கித்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் பிரபாகரனுடன் பதவி வெறிப்பிடித்த சிலர் தனி நாடு கோரிக்கையை வைத்து பல்லாயிரக் கணக்கான அப்பாவிககளை பலி பீடத்தில் ஏற்றி காவு கொடுத்தார்கள்.

ஒரு வேலை தமிழீழம் அமைந்தாலும் கூட இவர்களை எதிர்க்கும் அப்பாவிகளை கூட்டம் கூட்டமாக கொல்வார்கள். 

கொலை வெறி மட்டுமே அவர்களது பிரதான குறிக்கோள் !

தங்களுக்கு எதிராக நடப்பதாக அறிந்தால் அது யாராக இருந்தாலும் விட்டு வைக்கக் கூடாது என்ற முரட்டு சுபாவம் கொண்டவர்களே பயங்கரவாத புலிகள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியாக மனிதனைக் கடித்தக் கதையாக பிரபல சிங்கள தலைவர்கள் முதல் இந்திய தலைவர்கள் வரை மனித வெடி குண்டுகளால் சிதறச்செய்த கொலை வெறியர்கள் இறுதியாக ஒட்டிய வயிருடன், உடுத்திய ஒரு துண்டுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பு முகாம்ககளுக்குள் ஓடி அடைக்கலம் புகுந்த அப்பாவிகள் மீது நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்.

மனித இனம் வெட்கித் தலைகுணியும் நாசகாரச் செயலைச் செய்த பயங்கரவாத புலிகளை கண்டித்து தமிழகத்தில் இதுவரை யாரும் அறிக்கைகள் விடாதது,  ஆர்ப்பாட்டங்கள் நடத்தாது, கடைகள் அடைக்கப்படாதது, தீக் குளிக்காதது, படகில் ஏறிச்சென்று முல்லைத்தீவில் யுத்தம் செய்யப்போகிறோம் என்று வழக்கறிஞர்கள் அறிவிக்காதது  ஏன் ?

உண்மையிலேயே இதுவரை இவர்கள் நடத்திய போராட்டங்களும், பேரணிகளும், தீக்குளிப்புகளும் எதைக் காட்டுகிறது ?

கருனாநிதி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் வாதிகள் இதை வைத்து தங்களது கட்சிகளை வலுப்படுத்துகின்றனர் என்பது புரிகிறது !

அவர்களுடைய வரிசையில் இப்பொழுது புதிதாக முஸ்லீம் சமுதாயத்திற்காக ''மனித நேய மக்கள் கட்சி ''

இவர்களும் கட்சியை வளர்க்கத் தான் பாடுபடுவார்கள் மனித நேயத்திற்கு பாடுபட மாட்டார்கள் என்பது புரிகிறது. இல்லை என்றால் இலங்கை அரசேப் போரை நிருத்து என்றப் பிரகடனத்தை முழங்கி இருக்க மாட்டார்கள். மாறாக புலிகளே ஆயுதத்தைக் கீழேப் போட்டு சரணடைந்து விடு ! என்றப் பிரகடனத்தை முழங்கி இருப்பார்கள்.

காரணம் மற்ற அனைத்து கட்சிகளையும் விட இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு மூலகாரணம் யார் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். நன்றாகத் தெரிந்திருந்தும் உண்மையைக் கூறாமல் உண்மைக்கு மாறான ஒன்றை முதன் முதலில் கோரிக்கையாக வைக்கின்றார்கள் என்றால் ? காரணம் என்ன ?

தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையில் புலிகளை எதிர்த்து அறிக்கை விட்டால் எடுத்த எடுப்பிலேயே கட்சி கவிழ்ந்து விடும் என்பதால் மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றே இவர்களும் இலங்கை அரசேப் போரை நிருத்து என்ற பல்லவியைப் பாடுகின்றார்கள் . 

முதல் கோணல் முற்றும் கோணல்,  வளைந்துக கொடுக்க நினைப்பவர்களால் ஒருக்காலும் நிமிர்ந்து நிற்க முடியாது.

தவறான வழியில் பொருளீட்டி கால் நூற்றாண்டுகளுக்கு மேல் அடர்ந்தக் காடுகளில் கேளிக்கை வாழ்க்கையில் மூழ்கித் திளைத்த பயங்கரவாதப புலிகள் மேல்படி கேளிக்கை வாழ்க்கையை தொடருவதற்காகவே இன்றளவும் தமிழீழம் என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கையை கூறி வருகின்றனர்.

''கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - ழுழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். புகாரி 1036. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்....  அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், அக்டோபர் 03, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُأَلِيمٌ شَدِيدٌ  

அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது, கடினமானது. திருக்குர்ஆன் 11:102




தமிழீழ முழக்கமும், தமிழன அழிவும்.

ஒரு நாட்டில் சிறுபான்மை மக்களுடைய உரிமைகள் மறுக்கப்படும் பொழுது மேல்படி உரிமைகளை அந்த நாட்டு சட்டம் அனுமதித்த வழியில் ஜனநாயக ரீதியில் போராடி வென்றெடுக்க வேண்டும். மிகச்சிறந்த அறப்போர் யாதெனில் அநியாயக்கார அரசனிடத்தில் நியாயத்தை எடுத்துரைப்பதாகும் என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி)நூல். அபூதா¥த், திர்;மிதீ. 

நியாயத்தை எடுத்துரைப்பதாக இருந்தால் அதற்கு அறவழியின் மூலமாகவே எடுத்துரைக்க முடியும் நியாயத்தை வன்முறையில் இறங்கி எடுத்துரைக்க முடியாது வன்முறையில் எடுத்துரைக்க இறங்கினால் அது மேலும் அநியாயக்கார அரசனை அநியாயாம் இழைக்கத் தூண்டும்

ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் ஆளும் அரசிடம் வஞ்சிக்கப்படுவதாக கருதினால் அவர்கள் மேற்கானும் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் மீறினால் அது அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக கொண்டதாக ஆகிவிடும். இது தான் இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மை மக்கள் வஞ்சிக்கப்பட்டதாக கருத்தப்பட்டாலே அவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கே இது தான் நியதி என்றால் பெரும்பான்மை மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட அரசிடமிருந்து சிறுபான்மை மக்கள் நாட்டில் பாதியை பிரித்து கேட்டால் நிலமை என்னவாக இருக்கும் ?

அதுவும் ஆயுதம் தாங்கி அரசுக்கெதிராக வன்முறையில் இறங்கினால் அரசு சும்மா விடுமா ? அது பெரும்பான்மை அரசுடைய ஆளுமைக்கு விடப்பட்ட சவால். சவாலை முறியடிக்க எதையும் செய்வதற்கு தயங்காது தனது முழு பலத்தையும் பிரயோதித்து பரிவினைவாதிகளை ஒடுக்காமல் ஓயாது                                                                                               

அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள் ரானுவ பலத்தை பயன் படுத்தி பிரிவினை வாதிகளை ஒடுக்க இறங்கினால் அதில் அதிகபட்சம் பிரிவினைவாதிகளை விட அவர்களுடைய இனத்தைச் சார்ந்த, மொழியைச் சார்நத அப்பாவி மக்களே பாதிக்கப்படுவார்கள்.


இன்று உலகில் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், பயங்கரவாத செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்தில் உள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்பு பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் இருப்பதாக துருக்கியைத் தளமாகக் கொண்டியங்கும் மேற்படி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தக் காலப்பகுதியில் உலக நாடுகளில் 2396 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் 4204 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 7614பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. குறித்த காலபபகுதியில் ஈராக்கில் மாத்திரம் 857 பயங்கரவாதச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

அத்துடன், ஆப்கானிஸ்தானில் 334, இலங்கையில் 327, பாகிஸ்தானில் 216, இந்தியாவில் 195, சோமாலியாவில் 112, துருக்கியில் 71, தாய்லாந்தில் 55, நேபாளில் 44, இஸ்ரேலில் 31 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுடைய அபரிமிதமான வளர்ச்சி வளரும் வல்லரசு நாடுகளுக்கு பெரும் அச்சுருத்தலாக திகழ்ந்த காரணத்தால் வல்லரசு நாட்டின் சர்வாதிகாரிகள் ஜீரணிக்க முடியாத பொய் காரணங்களைக் கூறி நேட்டோ படைகளைக் கொண்டு கடும் தாக்குதலைத் தொடுத்து லட்சோப லட்சம் அப்பாவி முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்து தனக்கு அடங்காத ஆட்சியாளர்களை மாற்றி தனது கைப்பாவையை ஆட்சியில் அமரத்தி அவர்கள் மூலமாக உள்நாடடு கலவரங்களை தூண்டி விட்டு பொதுமக்களை கொன்று குவித்தார்கள் இன்று உலகில் சீரழிக்கப்பட்ட நாடுகளில் முதல் இரண்டு இடங்களில் ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் இருக்கின்றன்.

சீரழிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு இலங்கை வந்ததற்கு மேற்கானும் சூழல் காரணமல்ல கொலை வெறிப்பிடித்த ஒரு பயங்கரவாத கும்பலுடைய பதவி வெறியும், உலக ஆசையும் ஆட்டிப்படைத்ததால் இலங்கை அரசிடம் தனிநாடு கோரிக்கையை முன்வைக்க, அரசு அதை மறுக்க பயங்கரவாதிபகள் முதல் கட்டமாக இலங்கை அரசுக்கு சொந்தமான சொத்துக்களின் மீதும், அப்பாவி சிங்கள மக்கள வாழும் பகுதிகளின் மீதும் தாக்குதலை தொடங்கினர் அதில் அரசராங்கத்தின் சொத்துக்களும் அப்பாவி பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானதும் இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது ரானுவ நடவடிக்கையை டேற்கொண்டது.

இதில் அரசுடைய ரானுவ தாக்குதலினால் தமிழர்கள் கொல்லப்பட்டதால் மட்டும் சீரழிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்ததாக கருதக் கூடாது

  • விடுதலைப் புலிகள் தரப்பில் இலங்கையைச் சேர்ந்த பிரதமர்களையும், முக்கிய அரசு அதிகாரிகளையும் மனித வெடிகுண்டுகள் மூலமாக சிதறடிக்கச் செய்தார்கள்,
  • இலங்கை அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் இருக்கும் நிலைகளிலும் ரானுவத்துடன் எந்த தொடர்புமில்லாத அப்பாவி சிங்களர்கள் வாழும் பகுதிகளிலும் திடீர் தாக்குதலைத் தொடுத்து நிலைகுலையச் செயதுள்ளார்கள்,
  • உலக வரலாற்றிலேயே முதன் முறையாக அபயமளிக்கும் ஆலயத்தில் (பள்ளிவாசலில்) ஆயுதம் தரிக்காத நிராயுதபாணிகளான முஸ்லீம்களை ஆயுதம் தரித்த கொலைகாரப் புலிகள் சரமாரியாக சுட்டு வீழ்த்தினார்கள்,
  • அவர்களுடைய அமைப்பில் இடம்பெற்று அவர்களுடைய பயங்கரவாத கொள்கையை ஆதரித்தவர்கள் அவ்வப்பொழுது அவர்களுடைய குறைகளை சுட்டிக் காட்டிய பொழுது அவர்கள் தனது இனத்தவர்கள் என்றுக் கூடப்பாராமல் அவர்களது கழுத்துகளை அறுத்து ரெத்தம் குடிக்காமல் விட்டதில்லை,

பயங்கரவாத புலிகளுடைய தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புக்களையும், அரசு ரானுவத்தினரால் பதிலடி தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்களையும் சேரத்து கணகிட்டே மூன்றாவது இடத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகள் ஓவ்வொரு முறையும் தாக்குதலில் ஈடுபடும் பொழுது தங்களுடைய இருப்பிடத்தை பாதுகாப்பான இடத்தில் அமைத்துக் கொள்வார்கள் அரசு ரானுவம் வீரியமாக எதிர் தாக்குதல் தொடங்கினால் மேல்படி பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை அம்போவென்று விட்டு விட்டு வேறொரு இடத்திற்கு தங்களுடைய ஜாகையை மாற்றி விடுவார்கள் அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் ஒவ்வொரு முறையும் இதே நிலை தான்.


விடுதலைப்புலிகளின் தலைவர் தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார்--கருணா அம்மான்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இருப்பிடமாகத் தேர்வு செய்திருந்த முல்லைத்தீவை விட்டு புதுக்குடியிருப்பின் வடக்கு பகுதியொன்றுக்கு சென்றுவிட்டார் என அரச புலனாய்வு பகுதிகளுக்கு தெரியவந்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் முல்லைத்தீவை தனது பாதுகாப்புக்கு உகந்த இடம் என முன்பு தேர்வு செய்திருந்த போதிலும், தற்போது நடைபெறும் போர்ச் சூழல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய இராணுவ இலக்குத் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளின் தலைமை இம்முடிவை எடுத்துள்ளது எனவும் அது மேலும் எழுதியுள்ளது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் இந்தோநேசியாவுக்கோ அல்லது அப்பகுதியில் உள்ள வேறொரு நாட்டுக்கோ செல்லும் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதி பிரபாகரன் தனது நெருங்கிய சகாக்களுடன் வெளிநாடுகளில் பதுங்கிக் கொள்வதற்கு  முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்வார் அதன் படி சிலமாதங்கள் தலைமறைவாகி விடுவார் இதற்கு இடைப்பட்ட காலத்தில் தனது பயங்கரவாத அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து போதுமான ஆயுதங்களை கடத்திக்கொண்டு வந்து மறுதாக்குதலில் ஈடுபடச்செய்வார். இடைவிடாமல் இலங்கை அரசுடன் மோதுவதற்கு தேவையான பொருளாதாரம் அவர்களிடம் குவிந்து கிடப்பதுவே இதற்கு முக்கிய காரணமாகும். உலகில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளில் மேல்படி பயங்கரவாத புலிகளுடைய அமைப்பு இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஓர் புலணர்யவு சஞ்சிகையுடைய அறிக்கை கீழ்கானுமாறு கூறுகிறது.

உலகத்திலேயே இரண்டாவது அதிக கூடுதலான வருமானம் பெறும் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குவதாக ஜேன்ஸ் புலனாய்வு சஞ்சிகையின் ஆகஸ்ட் மாத இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெறுவதாக அந்த சஞ்சிகை கூறுகிறது. 

கப்பல்கள் மூலம் போதைப் பொருள்களைக் கடத்தல் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை மிரட்டிப் பணம் சேகரித்தல் போன்றவற்றின் மூலமே கூடுதலான நிதியை விடுதலைப் புலிகள் திரட்டிக்கொள்வதாகவும், கொலம்பிய புரட்சிகர இராணுவத்திற்கு அடுத்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பே கூடுதலான வருமானத்தை ஈட்டுவதாக ஜேன்ஸ் சஞ்சிகை குறிப்பிடுகிறது.



'தோள்களில் வைத்துத் தாக்கும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளே கடத்தல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. அதேநேரம் சிறிய ரக ஆயுதங்களும் அவர்களால் கடத்தப்படுகின்றன' என்று ஜேன்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவ ஆசிரியர் கிரிஸ்ரின்.லி.மிய்ரி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தமிழ் அறக்கட்டளை நிலையங்கள் மூலமும் விடுதலைப்புலிகள் வருமானங்களைத் திரட்டிக்கொள்வதாக ஜேன்ஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அயல் நாடான இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தியிருப்பதாகவும்இ 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால் அவர்கள் பலமிழந்து செல்வதாகவும் அந்தச் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கானும் விதம் அவர்களிடம் குவிந்து கிடக்கும் கள்ளப் பணத்தில் அதி நவீன ரானுவ தளவாடங்கள் கடத்திக் கொண்டு வந்து தங்களது மறைவிடத்திலும், தங்களது கோட்டை என்று சொல்லக் கூடிய கிளிநொச்சிப் போன்ற பகுதிகளையும் பலப்படுத்திக் கொள்வார்கள் அதனால் இலங்கை ரானுவம் அவர்களது கோட்டையை நீண்ட காலமாக நெருங்காமல் விட்டு வைத்துக் கொண்டே வந்தது. அவ்வாறு புலிகளுடைய கோட்டை என்று சொல்லக் கூடிய பகுதிகளில் ரானுவம் நெருங்காது என்ற நம்பிக்கையில் பலபாகங்களிலிருந்தும் கிளிநொச்சியை நோக்கி பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பயணித்து வந்து குவிந்ததால் இன்று அப்பாவி மக்கள் இலங்கை ரானுவத்துடைய நீண்ட நாள் இலக்குக்கு கொத்தும் குலையுமாக இரையாகி வருகின்றனர்.


கிளிநொச்சிக்கு 10ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்- கிளிநொச்சி அரசாங்க அதிபர்


கடந்த சில வாரங்களாக வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் இராணுவ நடவடிக்கைகளால் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து ஏழாயிரம் குடும்பங்களும்இ முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்களும்இ கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பது குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கேயுள்ள பூநகரி பிரதேசத்திலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம்இ இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வன்னியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்வு
கடந்த சில வாரங்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான் தாக்குதல்களால் பெருமளவானர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் வவுனியாவிலிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக மிகவும் குறைந்தளவான நிவாரணப் பொருள்களே வன்னிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுவதாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
'இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை நோக்கி இடம்பெயர்ந்தள்ளனர். இவர்களைக் கண்காணிப்பதற்கு அங்கு யாரும் இல்லை' என யாழ் ஆயர் கவலை வெளியிட்டுள்ளார்


பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பயங்கரவாத புலிகளிடம் குவிந்து கிடக்கும் முறையற்று ஈட்டிய பொருளாதாரமும், அவர்களை கண்மூடி ஆதரிக்கும் கலைஞர், வைகோப் போன்ற அரசியல்வாதிகளும், இனவெறிப் பிடித்த பிற்போக்குவாத பத்திரிகைகளுமே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அப்பாவி மக்கள் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணகர்த்தாவாகயிருக்கும் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆணந்த விகடன் என்ற தரம் தாழ்ந்த சினிமாப் பத்திரிக்கை தமிழக மக்களிடத்தில் புலிகள் அமைப்பிற்கு ஆதரவா ? எதிர்ப்பா ? தமிழீழத்துக்கு ஆதரவா ? எதிர்ப்பா ? என்ற கருத்து கணிப்பு நடத்தி எரிகின்ற நெருப்பில் எண்ணெயை வார்த்து ஊதி விட்டிருக்கின்றது

தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25 ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44ம- தடையை நீக்க வேண்டும்- 47.65 'ஆனந்த விகடன்' கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான 'ஆனந்த விகடன்' தெரிவித்துள்ளது. ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்

மண்ணின் மைந்தர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டால் சிதறச்செய்து உலக அளவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய அரக்கர்களுடைய அமைப்புக்கு கருத்து கணிப்பு என்றப் பெயரில் அதிக வாக்கிருப்பதாக கூறி பயங்கரவாதிகளுக்கு வெறியேற்றி விடுவது அவர்களது இனவெறியையும், மொழிவெறியையும் காட்டவில்லையா ?


காத்தான்குடி பள்ளிவாசலில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்திய போது வாய் திறக்காத விகடன், 24 மணிநேரம் கெடுவிதித்து யாழ்பான முஸ்லிம்களை துப்பாக்கி முணையில் விரட்டி அடித்தபொழுது வாய்திறக்காத விகடன் இன்று பயங்கரவாத புலிகள் தனது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதை அறிந்து அவர்கள் உற்சாகத்துடன் இலங்கை ரானுவத்துடன் மோதுவதற்காக இனவெறியில் நடத்தப்பட்ட கருத்துக கணிப்பாக தெரிய வில்லையா ?   இவர்களுடைய இந்த போக்கு இலங்கையில் அழிக்கப்பட்டு வரும் அப்பாவி தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தானதே !

உலகின் பலநாடுகளில் விடுதலைப் புலிகளுடைய உண்மை நிலை அறிந்து அவர்களுடைய கொலைவெறி இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் நம்முடைய பிரதமர் ஒருவரை அவர்களால் இழந்தும் மொழிவெறியில் அவர்களை ஆதரிப்பது இன்னும் இலங்கை தமிழின மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு  ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை ஆஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் ஆஸ்திரேலியா விரும்புகிறது.

இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்' என ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இம்முறை ஆஸ்திரேலியாவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலரை ஆஸ்திரேலியா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

எந்த தமிழ் மக்களுக்காக தனிநாடு கோரிக்கையை முன்வைத்ததாக கூறுகின்றார்களோ  அவர்களை பிறந்த நாட்டிலும் வாழ விடாமல் அடைக்கலம் புகுந்த அந்நிய நாடுகளிலும் வாழ விடாமல் மேற்கானும் பயங்கரவாதிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளனர். சிந்தியுங்கள் !

மற்ற எந்த மாநிலத்தையும் விட தமிழகமே எனக்கு பிடித்த மாநிலம் அதில் எனக்கு பகாதுகாப்பு தேவை இல்லை என்றுக் கூறி வந்த பிரதமர் ராஜீவ் காந்தியை மனித குண்டமாக மாறி அவருடைய உடலை சல்லடையாக்கினார்களே பாவிகள் ! சிந்தியுங்கள்.

  • விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழர்களுக்காக போராடுவதாக இருந்தால் அப்பாவி தமிழர்கள் ரானுவத்தினரால் பாதிக்கப்பட்ட பொழுது முறையற்று ஈட்டிய பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு சிலவற்றை கொடுத்துதவாதது  ஏன் ? சிந்தியுங்கள் !

  • அதேப்போன்று விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழர்களுக்காக போராடுவதாக இருந்தால் அப்பாவி தமிழர்கள் ரானுவத்தினரால் பெருமளவு கொல்லப்படும்போது எங்களால் அதிகமான மக்கள் கொல்லப்படுவதால் இன்று சரணடைகிறோம் என்றுக்கூற முன்வாராதது ஏன் ? சிந்தியுங்கள்

  • தமிழனக் காவலர்(?) கலைஞர் அவர்களே !
  • விடுதலைப்புலிகளின் ரெத்தத்தின் ரெத்தமான வைகோ அவர்களே !
  • இன்னும் பிற அரசியல்வாதிகளே !
  • சினிமா நடிகர் நடிகைகளே !
  • விடுலைப்புலிகளுடைய அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் பத்திரிக்கைகளே ! 

உங்களுடைய நோக்கம் அப்பாவி தமிழர்களை அழிவிலிருந்து மீட்பதாக இருந்தால் ரெத்தம் சிந்தும் தமிழின மக்களின் மீது இரக்கம் இருந்தால் ? அனுதாபம் இருந்தால் ? பயங்கரவாத புலிகளை ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு சரணடையச் சொல்லுங்கள்.

இலங்கை அரசே போர் நிருத்தம் செய் !  என்றக் கோஷத்தை மாற்றி
புலிகளே சரணடை ! என்றக் கோஷத்திற்கு மாருங்கள்.

சரணடைய மறுத்தால் ?

இந்திய ரானுவத்தை இலங்கைக்கு அனுப்பி இலங்கை ரானுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் கோரிக்கையை முன்வையுங்கள் இதுவே அப்பாவி தமிழர்களுக்கு நிம்மிதி பெருமூச்சை ஏற்படுத்தும் இதைத் தான் ராஜபக்சே கூறுகிறார்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் போக்கு உங்களிடத்தில் தொடரந்து நீடித்ததென்றால் விடுதலைப் புலிகளிடம் குவிந்து கிடக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு மறைந்திருந்து தொடரந்து தாக்குவார்கள் அவர்கள் ஒவ்வொரு முறை தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அப்பாவி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மொத்தமாக துடைத்தெறியப்படுவார்கள்.

இன்று உலகில் அநியாயமாக சிதைக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை முதலிடத்திற்கு வந்து விடும் அபாயம் ஏற்படலாம்.  

முஸ்லிம் சகோதரர்களே ! முஸ்லிம் அமைப்புகளே  !
இலங்கை ரானுவத்தினரால் கடும் தாக்குதலுக்குள்ளாகும் அப்பாவி தமிழர்களுக்காக நிதி திரட்டி அனுப்புங்கள்.

  • யாழ்பானத்திலிருந்து 24 மணிநேரம் கெடுவிதித்து முஸ்லிம்களை விரட்டி அடித்தது நம் சகோதர ஹிந்துக்கள் அல்ல ! பயங்கரவாத புலிகளாவார்கள்.

  • அபயமளிக்கும் பள்ளிவாசலில் தக்பீர் கூறி இறைவனிடம் ஐக்கியமாகிக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளியது நம் சகோதர ஹிந்துக்கள் அல்ல ! பயங்கரவாத புலிகளாகும் .
பயங்கரவாத புலிகளை வல்ல இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்காக உதவிக்கரம் நீட்டுவோம்.

அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது, கடினமானது. திருக்குர்ஆன் 11:102



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்