உலகத்திலேயே இரண்டாவது அதிக கூடுதலான வருமானம் பெறும் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குவதாக ஜேன்ஸ் புலனாய்வு சஞ்சிகையின் ஆகஸ்ட் மாத இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெறுவதாக அந்த சஞ்சிகை கூறுகிறது.
கப்பல்கள் மூலம் போதைப் பொருள்களைக் கடத்தல் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை மிரட்டிப் பணம் சேகரித்தல் போன்றவற்றின் மூலமே கூடுதலான நிதியை விடுதலைப் புலிகள் திரட்டிக்கொள்வதாகவும், கொலம்பிய புரட்சிகர இராணுவத்திற்கு அடுத்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பே கூடுதலான வருமானத்தை ஈட்டுவதாக ஜேன்ஸ் சஞ்சிகை குறிப்பிடுகிறது.
'தோள்களில் வைத்துத் தாக்கும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளே கடத்தல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. அதேநேரம் சிறிய ரக ஆயுதங்களும் அவர்களால் கடத்தப்படுகின்றன' என்று ஜேன்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவ ஆசிரியர் கிரிஸ்ரின்.லி.மிய்ரி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தமிழ் அறக்கட்டளை நிலையங்கள் மூலமும் விடுதலைப்புலிகள் வருமானங்களைத் திரட்டிக்கொள்வதாக ஜேன்ஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அயல் நாடான இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தியிருப்பதாகவும்இ 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால் அவர்கள் பலமிழந்து செல்வதாகவும் அந்தச் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கானும் விதம் அவர்களிடம் குவிந்து கிடக்கும் கள்ளப் பணத்தில் அதி நவீன ரானுவ தளவாடங்கள் கடத்திக் கொண்டு வந்து தங்களது மறைவிடத்திலும், தங்களது கோட்டை என்று சொல்லக் கூடிய கிளிநொச்சிப் போன்ற பகுதிகளையும் பலப்படுத்திக் கொள்வார்கள் அதனால் இலங்கை ரானுவம் அவர்களது கோட்டையை நீண்ட காலமாக நெருங்காமல் விட்டு வைத்துக் கொண்டே வந்தது. அவ்வாறு புலிகளுடைய கோட்டை என்று சொல்லக் கூடிய பகுதிகளில் ரானுவம் நெருங்காது என்ற நம்பிக்கையில் பலபாகங்களிலிருந்தும் கிளிநொச்சியை நோக்கி பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பயணித்து வந்து குவிந்ததால் இன்று அப்பாவி மக்கள் இலங்கை ரானுவத்துடைய நீண்ட நாள் இலக்குக்கு கொத்தும் குலையுமாக இரையாகி வருகின்றனர்.
கிளிநொச்சிக்கு 10ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்- கிளிநொச்சி அரசாங்க அதிபர்
கடந்த சில வாரங்களாக வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் இராணுவ நடவடிக்கைகளால் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து ஏழாயிரம் குடும்பங்களும்இ முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்களும்இ கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பது குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கேயுள்ள பூநகரி பிரதேசத்திலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம்இ இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வன்னியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்வு
கடந்த சில வாரங்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான் தாக்குதல்களால் பெருமளவானர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் வவுனியாவிலிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக மிகவும் குறைந்தளவான நிவாரணப் பொருள்களே வன்னிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுவதாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
'இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை நோக்கி இடம்பெயர்ந்தள்ளனர். இவர்களைக் கண்காணிப்பதற்கு அங்கு யாரும் இல்லை' என யாழ் ஆயர் கவலை வெளியிட்டுள்ளார்
பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பயங்கரவாத புலிகளிடம் குவிந்து கிடக்கும் முறையற்று ஈட்டிய பொருளாதாரமும், அவர்களை கண்மூடி ஆதரிக்கும் கலைஞர், வைகோப் போன்ற அரசியல்வாதிகளும், இனவெறிப் பிடித்த பிற்போக்குவாத பத்திரிகைகளுமே என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அப்பாவி மக்கள் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணகர்த்தாவாகயிருக்கும் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆணந்த விகடன் என்ற தரம் தாழ்ந்த சினிமாப் பத்திரிக்கை தமிழக மக்களிடத்தில் புலிகள் அமைப்பிற்கு ஆதரவா ? எதிர்ப்பா ? தமிழீழத்துக்கு ஆதரவா ? எதிர்ப்பா ? என்ற கருத்து கணிப்பு நடத்தி எரிகின்ற நெருப்பில் எண்ணெயை வார்த்து ஊதி விட்டிருக்கின்றது
தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25 ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44ம- தடையை நீக்க வேண்டும்- 47.65 'ஆனந்த விகடன்' கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான 'ஆனந்த விகடன்' தெரிவித்துள்ளது. ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்
மண்ணின் மைந்தர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டால் சிதறச்செய்து உலக அளவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய அரக்கர்களுடைய அமைப்புக்கு கருத்து கணிப்பு என்றப் பெயரில் அதிக வாக்கிருப்பதாக கூறி பயங்கரவாதிகளுக்கு வெறியேற்றி விடுவது அவர்களது இனவெறியையும், மொழிவெறியையும் காட்டவில்லையா ?
காத்தான்குடி பள்ளிவாசலில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்திய போது வாய் திறக்காத விகடன், 24 மணிநேரம் கெடுவிதித்து யாழ்பான முஸ்லிம்களை துப்பாக்கி முணையில் விரட்டி அடித்தபொழுது வாய்திறக்காத விகடன் இன்று பயங்கரவாத புலிகள் தனது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதை அறிந்து அவர்கள் உற்சாகத்துடன் இலங்கை ரானுவத்துடன் மோதுவதற்காக இனவெறியில் நடத்தப்பட்ட கருத்துக கணிப்பாக தெரிய வில்லையா ? இவர்களுடைய இந்த போக்கு இலங்கையில் அழிக்கப்பட்டு வரும் அப்பாவி தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தானதே !
உலகின் பலநாடுகளில் விடுதலைப் புலிகளுடைய உண்மை நிலை அறிந்து அவர்களுடைய கொலைவெறி இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் நம்முடைய பிரதமர் ஒருவரை அவர்களால் இழந்தும் மொழிவெறியில் அவர்களை ஆதரிப்பது இன்னும் இலங்கை தமிழின மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை ஆஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் ஆஸ்திரேலியா விரும்புகிறது.
இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்' என ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சார்க் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இம்முறை ஆஸ்திரேலியாவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலரை ஆஸ்திரேலியா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
எந்த தமிழ் மக்களுக்காக தனிநாடு கோரிக்கையை முன்வைத்ததாக கூறுகின்றார்களோ அவர்களை பிறந்த நாட்டிலும் வாழ விடாமல் அடைக்கலம் புகுந்த அந்நிய நாடுகளிலும் வாழ விடாமல் மேற்கானும் பயங்கரவாதிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளனர். சிந்தியுங்கள் !
மற்ற எந்த மாநிலத்தையும் விட தமிழகமே எனக்கு பிடித்த மாநிலம் அதில் எனக்கு பகாதுகாப்பு தேவை இல்லை என்றுக் கூறி வந்த பிரதமர் ராஜீவ் காந்தியை மனித குண்டமாக மாறி அவருடைய உடலை சல்லடையாக்கினார்களே பாவிகள் ! சிந்தியுங்கள்.
- விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழர்களுக்காக போராடுவதாக இருந்தால் அப்பாவி தமிழர்கள் ரானுவத்தினரால் பாதிக்கப்பட்ட பொழுது முறையற்று ஈட்டிய பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு சிலவற்றை கொடுத்துதவாதது ஏன் ? சிந்தியுங்கள் !
- அதேப்போன்று விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழர்களுக்காக போராடுவதாக இருந்தால் அப்பாவி தமிழர்கள் ரானுவத்தினரால் பெருமளவு கொல்லப்படும்போது எங்களால் அதிகமான மக்கள் கொல்லப்படுவதால் இன்று சரணடைகிறோம் என்றுக்கூற முன்வாராதது ஏன் ? சிந்தியுங்கள்
- தமிழனக் காவலர்(?) கலைஞர் அவர்களே !
- விடுதலைப்புலிகளின் ரெத்தத்தின் ரெத்தமான வைகோ அவர்களே !
- இன்னும் பிற அரசியல்வாதிகளே !
- சினிமா நடிகர் நடிகைகளே !
- விடுலைப்புலிகளுடைய அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் பத்திரிக்கைகளே !
உங்களுடைய நோக்கம் அப்பாவி தமிழர்களை அழிவிலிருந்து மீட்பதாக இருந்தால் ரெத்தம் சிந்தும் தமிழின மக்களின் மீது இரக்கம் இருந்தால் ? அனுதாபம் இருந்தால் ? பயங்கரவாத புலிகளை ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு சரணடையச் சொல்லுங்கள்.
இலங்கை அரசே போர் நிருத்தம் செய் ! என்றக் கோஷத்தை மாற்றி
புலிகளே சரணடை ! என்றக் கோஷத்திற்கு மாருங்கள்.
சரணடைய மறுத்தால் ?
இந்திய ரானுவத்தை இலங்கைக்கு அனுப்பி இலங்கை ரானுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் கோரிக்கையை முன்வையுங்கள் இதுவே அப்பாவி தமிழர்களுக்கு நிம்மிதி பெருமூச்சை ஏற்படுத்தும் இதைத் தான் ராஜபக்சே கூறுகிறார்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் போக்கு உங்களிடத்தில் தொடரந்து நீடித்ததென்றால் விடுதலைப் புலிகளிடம் குவிந்து கிடக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு மறைந்திருந்து தொடரந்து தாக்குவார்கள் அவர்கள் ஒவ்வொரு முறை தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அப்பாவி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மொத்தமாக துடைத்தெறியப்படுவார்கள்.
இன்று உலகில் அநியாயமாக சிதைக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை முதலிடத்திற்கு வந்து விடும் அபாயம் ஏற்படலாம்.
முஸ்லிம் சகோதரர்களே ! முஸ்லிம் அமைப்புகளே !
இலங்கை ரானுவத்தினரால் கடும் தாக்குதலுக்குள்ளாகும் அப்பாவி தமிழர்களுக்காக நிதி திரட்டி அனுப்புங்கள்.
- யாழ்பானத்திலிருந்து 24 மணிநேரம் கெடுவிதித்து முஸ்லிம்களை விரட்டி அடித்தது நம் சகோதர ஹிந்துக்கள் அல்ல ! பயங்கரவாத புலிகளாவார்கள்.
- அபயமளிக்கும் பள்ளிவாசலில் தக்பீர் கூறி இறைவனிடம் ஐக்கியமாகிக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளியது நம் சகோதர ஹிந்துக்கள் அல்ல ! பயங்கரவாத புலிகளாகும் .
பயங்கரவாத புலிகளை வல்ல இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்காக உதவிக்கரம் நீட்டுவோம்.
அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது, கடினமானது. திருக்குர்ஆன் 11:102
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்