திங்கள், டிசம்பர் 26, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...


விஸ்வமடுவில் தமிழர்கள் பாதுகாப்பு முகாமில் பெண் விடுதலைப் புலி மணித வெடிகுண்டு.

விஸ்மடுவில் இலங்கை ராணுவம் அமைத்திருந்த நிராயுதபாணிகளாகிய அப்பாவி தமிழர்களுக்கான பாதுகாப்பு முகாமுக்குள் நேற்றைய தினம் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அதில் ஏராளமான அப்பாவி அகதிகள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர் ஏராளமான மக்கள் தங்களுடைய உடல் உறுப்புக்களை இழந்து தவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பாவி தழிழர்கள் தங்களை புலிகள் பகடைக்காயாகப் பயன் படுத்துவதை அறிந்து அவர்களிடமிருந்து பல்லாயிரக் கணக்கில் வெளியேறி ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலம் புகுந்து வந்தனர்.

இந்தச் செயலைப் பிடிக்காத பயங்கரவாதப் புலிகள் அவர்கள் மீது நடத்திய மாபாதகச் செயல் தான் மேல்படி ரெத்தத்தை உறையச் செய்யும் பெண் மனித வெடிகுண்டு சம்பவமாகும்.

தனி தமிழீழம் அமைப்பதாக கூறியதெல்லாம் பிரபாகரன் குறிப்பிட்ட ஒரு சிலருடைய சுபபோக வாழ்க்கைக்காவே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் புலிகளுடைய தனி தமிழீழக் கோரிக்கை வைப்பதற்கு முன் இலங்கை தமிழர்கள் எந்த வகையிலும் இலங்கை அரசால் புறக்கணிக்கப் படவில்லை இரண்டாம் தர மக்களாக நடத்தப்படவில்லை அரசு உத்தியோகம் முதல், அவர்கள் பேசும் மொழி வரை முக்கித்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் பிரபாகரனுடன் பதவி வெறிப்பிடித்த சிலர் தனி நாடு கோரிக்கையை வைத்து பல்லாயிரக் கணக்கான அப்பாவிககளை பலி பீடத்தில் ஏற்றி காவு கொடுத்தார்கள்.

ஒரு வேலை தமிழீழம் அமைந்தாலும் கூட இவர்களை எதிர்க்கும் அப்பாவிகளை கூட்டம் கூட்டமாக கொல்வார்கள். 

கொலை வெறி மட்டுமே அவர்களது பிரதான குறிக்கோள் !

தங்களுக்கு எதிராக நடப்பதாக அறிந்தால் அது யாராக இருந்தாலும் விட்டு வைக்கக் கூடாது என்ற முரட்டு சுபாவம் கொண்டவர்களே பயங்கரவாத புலிகள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியாக மனிதனைக் கடித்தக் கதையாக பிரபல சிங்கள தலைவர்கள் முதல் இந்திய தலைவர்கள் வரை மனித வெடி குண்டுகளால் சிதறச்செய்த கொலை வெறியர்கள் இறுதியாக ஒட்டிய வயிருடன், உடுத்திய ஒரு துண்டுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பு முகாம்ககளுக்குள் ஓடி அடைக்கலம் புகுந்த அப்பாவிகள் மீது நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்.

மனித இனம் வெட்கித் தலைகுணியும் நாசகாரச் செயலைச் செய்த பயங்கரவாத புலிகளை கண்டித்து தமிழகத்தில் இதுவரை யாரும் அறிக்கைகள் விடாதது,  ஆர்ப்பாட்டங்கள் நடத்தாது, கடைகள் அடைக்கப்படாதது, தீக் குளிக்காதது, படகில் ஏறிச்சென்று முல்லைத்தீவில் யுத்தம் செய்யப்போகிறோம் என்று வழக்கறிஞர்கள் அறிவிக்காதது  ஏன் ?

உண்மையிலேயே இதுவரை இவர்கள் நடத்திய போராட்டங்களும், பேரணிகளும், தீக்குளிப்புகளும் எதைக் காட்டுகிறது ?

கருனாநிதி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் வாதிகள் இதை வைத்து தங்களது கட்சிகளை வலுப்படுத்துகின்றனர் என்பது புரிகிறது !

அவர்களுடைய வரிசையில் இப்பொழுது புதிதாக முஸ்லீம் சமுதாயத்திற்காக ''மனித நேய மக்கள் கட்சி ''

இவர்களும் கட்சியை வளர்க்கத் தான் பாடுபடுவார்கள் மனித நேயத்திற்கு பாடுபட மாட்டார்கள் என்பது புரிகிறது. இல்லை என்றால் இலங்கை அரசேப் போரை நிருத்து என்றப் பிரகடனத்தை முழங்கி இருக்க மாட்டார்கள். மாறாக புலிகளே ஆயுதத்தைக் கீழேப் போட்டு சரணடைந்து விடு ! என்றப் பிரகடனத்தை முழங்கி இருப்பார்கள்.

காரணம் மற்ற அனைத்து கட்சிகளையும் விட இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு மூலகாரணம் யார் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். நன்றாகத் தெரிந்திருந்தும் உண்மையைக் கூறாமல் உண்மைக்கு மாறான ஒன்றை முதன் முதலில் கோரிக்கையாக வைக்கின்றார்கள் என்றால் ? காரணம் என்ன ?

தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையில் புலிகளை எதிர்த்து அறிக்கை விட்டால் எடுத்த எடுப்பிலேயே கட்சி கவிழ்ந்து விடும் என்பதால் மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றே இவர்களும் இலங்கை அரசேப் போரை நிருத்து என்ற பல்லவியைப் பாடுகின்றார்கள் . 

முதல் கோணல் முற்றும் கோணல்,  வளைந்துக கொடுக்க நினைப்பவர்களால் ஒருக்காலும் நிமிர்ந்து நிற்க முடியாது.

தவறான வழியில் பொருளீட்டி கால் நூற்றாண்டுகளுக்கு மேல் அடர்ந்தக் காடுகளில் கேளிக்கை வாழ்க்கையில் மூழ்கித் திளைத்த பயங்கரவாதப புலிகள் மேல்படி கேளிக்கை வாழ்க்கையை தொடருவதற்காகவே இன்றளவும் தமிழீழம் என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கையை கூறி வருகின்றனர்.

''கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - ழுழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். புகாரி 1036. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்....  அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், அக்டோபர் 03, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُأَلِيمٌ شَدِيدٌ  

அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது, கடினமானது. திருக்குர்ஆன் 11:102




தமிழீழ முழக்கமும், தமிழன அழிவும்.

ஒரு நாட்டில் சிறுபான்மை மக்களுடைய உரிமைகள் மறுக்கப்படும் பொழுது மேல்படி உரிமைகளை அந்த நாட்டு சட்டம் அனுமதித்த வழியில் ஜனநாயக ரீதியில் போராடி வென்றெடுக்க வேண்டும். மிகச்சிறந்த அறப்போர் யாதெனில் அநியாயக்கார அரசனிடத்தில் நியாயத்தை எடுத்துரைப்பதாகும் என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி)நூல். அபூதா¥த், திர்;மிதீ. 

நியாயத்தை எடுத்துரைப்பதாக இருந்தால் அதற்கு அறவழியின் மூலமாகவே எடுத்துரைக்க முடியும் நியாயத்தை வன்முறையில் இறங்கி எடுத்துரைக்க முடியாது வன்முறையில் எடுத்துரைக்க இறங்கினால் அது மேலும் அநியாயக்கார அரசனை அநியாயாம் இழைக்கத் தூண்டும்

ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் ஆளும் அரசிடம் வஞ்சிக்கப்படுவதாக கருதினால் அவர்கள் மேற்கானும் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் மீறினால் அது அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக கொண்டதாக ஆகிவிடும். இது தான் இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மை மக்கள் வஞ்சிக்கப்பட்டதாக கருத்தப்பட்டாலே அவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கே இது தான் நியதி என்றால் பெரும்பான்மை மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட அரசிடமிருந்து சிறுபான்மை மக்கள் நாட்டில் பாதியை பிரித்து கேட்டால் நிலமை என்னவாக இருக்கும் ?

அதுவும் ஆயுதம் தாங்கி அரசுக்கெதிராக வன்முறையில் இறங்கினால் அரசு சும்மா விடுமா ? அது பெரும்பான்மை அரசுடைய ஆளுமைக்கு விடப்பட்ட சவால். சவாலை முறியடிக்க எதையும் செய்வதற்கு தயங்காது தனது முழு பலத்தையும் பிரயோதித்து பரிவினைவாதிகளை ஒடுக்காமல் ஓயாது                                                                                               

அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள் ரானுவ பலத்தை பயன் படுத்தி பிரிவினை வாதிகளை ஒடுக்க இறங்கினால் அதில் அதிகபட்சம் பிரிவினைவாதிகளை விட அவர்களுடைய இனத்தைச் சார்ந்த, மொழியைச் சார்நத அப்பாவி மக்களே பாதிக்கப்படுவார்கள்.


இன்று உலகில் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், பயங்கரவாத செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்தில் உள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்பு பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் இருப்பதாக துருக்கியைத் தளமாகக் கொண்டியங்கும் மேற்படி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தக் காலப்பகுதியில் உலக நாடுகளில் 2396 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் 4204 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 7614பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. குறித்த காலபபகுதியில் ஈராக்கில் மாத்திரம் 857 பயங்கரவாதச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

அத்துடன், ஆப்கானிஸ்தானில் 334, இலங்கையில் 327, பாகிஸ்தானில் 216, இந்தியாவில் 195, சோமாலியாவில் 112, துருக்கியில் 71, தாய்லாந்தில் 55, நேபாளில் 44, இஸ்ரேலில் 31 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுடைய அபரிமிதமான வளர்ச்சி வளரும் வல்லரசு நாடுகளுக்கு பெரும் அச்சுருத்தலாக திகழ்ந்த காரணத்தால் வல்லரசு நாட்டின் சர்வாதிகாரிகள் ஜீரணிக்க முடியாத பொய் காரணங்களைக் கூறி நேட்டோ படைகளைக் கொண்டு கடும் தாக்குதலைத் தொடுத்து லட்சோப லட்சம் அப்பாவி முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்து தனக்கு அடங்காத ஆட்சியாளர்களை மாற்றி தனது கைப்பாவையை ஆட்சியில் அமரத்தி அவர்கள் மூலமாக உள்நாடடு கலவரங்களை தூண்டி விட்டு பொதுமக்களை கொன்று குவித்தார்கள் இன்று உலகில் சீரழிக்கப்பட்ட நாடுகளில் முதல் இரண்டு இடங்களில் ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் இருக்கின்றன்.

சீரழிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு இலங்கை வந்ததற்கு மேற்கானும் சூழல் காரணமல்ல கொலை வெறிப்பிடித்த ஒரு பயங்கரவாத கும்பலுடைய பதவி வெறியும், உலக ஆசையும் ஆட்டிப்படைத்ததால் இலங்கை அரசிடம் தனிநாடு கோரிக்கையை முன்வைக்க, அரசு அதை மறுக்க பயங்கரவாதிபகள் முதல் கட்டமாக இலங்கை அரசுக்கு சொந்தமான சொத்துக்களின் மீதும், அப்பாவி சிங்கள மக்கள வாழும் பகுதிகளின் மீதும் தாக்குதலை தொடங்கினர் அதில் அரசராங்கத்தின் சொத்துக்களும் அப்பாவி பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானதும் இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது ரானுவ நடவடிக்கையை டேற்கொண்டது.

இதில் அரசுடைய ரானுவ தாக்குதலினால் தமிழர்கள் கொல்லப்பட்டதால் மட்டும் சீரழிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்ததாக கருதக் கூடாது

  • விடுதலைப் புலிகள் தரப்பில் இலங்கையைச் சேர்ந்த பிரதமர்களையும், முக்கிய அரசு அதிகாரிகளையும் மனித வெடிகுண்டுகள் மூலமாக சிதறடிக்கச் செய்தார்கள்,
  • இலங்கை அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் இருக்கும் நிலைகளிலும் ரானுவத்துடன் எந்த தொடர்புமில்லாத அப்பாவி சிங்களர்கள் வாழும் பகுதிகளிலும் திடீர் தாக்குதலைத் தொடுத்து நிலைகுலையச் செயதுள்ளார்கள்,
  • உலக வரலாற்றிலேயே முதன் முறையாக அபயமளிக்கும் ஆலயத்தில் (பள்ளிவாசலில்) ஆயுதம் தரிக்காத நிராயுதபாணிகளான முஸ்லீம்களை ஆயுதம் தரித்த கொலைகாரப் புலிகள் சரமாரியாக சுட்டு வீழ்த்தினார்கள்,
  • அவர்களுடைய அமைப்பில் இடம்பெற்று அவர்களுடைய பயங்கரவாத கொள்கையை ஆதரித்தவர்கள் அவ்வப்பொழுது அவர்களுடைய குறைகளை சுட்டிக் காட்டிய பொழுது அவர்கள் தனது இனத்தவர்கள் என்றுக் கூடப்பாராமல் அவர்களது கழுத்துகளை அறுத்து ரெத்தம் குடிக்காமல் விட்டதில்லை,

பயங்கரவாத புலிகளுடைய தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புக்களையும், அரசு ரானுவத்தினரால் பதிலடி தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்களையும் சேரத்து கணகிட்டே மூன்றாவது இடத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகள் ஓவ்வொரு முறையும் தாக்குதலில் ஈடுபடும் பொழுது தங்களுடைய இருப்பிடத்தை பாதுகாப்பான இடத்தில் அமைத்துக் கொள்வார்கள் அரசு ரானுவம் வீரியமாக எதிர் தாக்குதல் தொடங்கினால் மேல்படி பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை அம்போவென்று விட்டு விட்டு வேறொரு இடத்திற்கு தங்களுடைய ஜாகையை மாற்றி விடுவார்கள் அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் ஒவ்வொரு முறையும் இதே நிலை தான்.


விடுதலைப்புலிகளின் தலைவர் தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார்--கருணா அம்மான்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இருப்பிடமாகத் தேர்வு செய்திருந்த முல்லைத்தீவை விட்டு புதுக்குடியிருப்பின் வடக்கு பகுதியொன்றுக்கு சென்றுவிட்டார் என அரச புலனாய்வு பகுதிகளுக்கு தெரியவந்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் முல்லைத்தீவை தனது பாதுகாப்புக்கு உகந்த இடம் என முன்பு தேர்வு செய்திருந்த போதிலும், தற்போது நடைபெறும் போர்ச் சூழல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய இராணுவ இலக்குத் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளின் தலைமை இம்முடிவை எடுத்துள்ளது எனவும் அது மேலும் எழுதியுள்ளது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் இந்தோநேசியாவுக்கோ அல்லது அப்பகுதியில் உள்ள வேறொரு நாட்டுக்கோ செல்லும் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதி பிரபாகரன் தனது நெருங்கிய சகாக்களுடன் வெளிநாடுகளில் பதுங்கிக் கொள்வதற்கு  முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்வார் அதன் படி சிலமாதங்கள் தலைமறைவாகி விடுவார் இதற்கு இடைப்பட்ட காலத்தில் தனது பயங்கரவாத அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து போதுமான ஆயுதங்களை கடத்திக்கொண்டு வந்து மறுதாக்குதலில் ஈடுபடச்செய்வார். இடைவிடாமல் இலங்கை அரசுடன் மோதுவதற்கு தேவையான பொருளாதாரம் அவர்களிடம் குவிந்து கிடப்பதுவே இதற்கு முக்கிய காரணமாகும். உலகில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளில் மேல்படி பயங்கரவாத புலிகளுடைய அமைப்பு இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஓர் புலணர்யவு சஞ்சிகையுடைய அறிக்கை கீழ்கானுமாறு கூறுகிறது.

உலகத்திலேயே இரண்டாவது அதிக கூடுதலான வருமானம் பெறும் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குவதாக ஜேன்ஸ் புலனாய்வு சஞ்சிகையின் ஆகஸ்ட் மாத இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெறுவதாக அந்த சஞ்சிகை கூறுகிறது. 

கப்பல்கள் மூலம் போதைப் பொருள்களைக் கடத்தல் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை மிரட்டிப் பணம் சேகரித்தல் போன்றவற்றின் மூலமே கூடுதலான நிதியை விடுதலைப் புலிகள் திரட்டிக்கொள்வதாகவும், கொலம்பிய புரட்சிகர இராணுவத்திற்கு அடுத்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பே கூடுதலான வருமானத்தை ஈட்டுவதாக ஜேன்ஸ் சஞ்சிகை குறிப்பிடுகிறது.



'தோள்களில் வைத்துத் தாக்கும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளே கடத்தல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. அதேநேரம் சிறிய ரக ஆயுதங்களும் அவர்களால் கடத்தப்படுகின்றன' என்று ஜேன்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவ ஆசிரியர் கிரிஸ்ரின்.லி.மிய்ரி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தமிழ் அறக்கட்டளை நிலையங்கள் மூலமும் விடுதலைப்புலிகள் வருமானங்களைத் திரட்டிக்கொள்வதாக ஜேன்ஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அயல் நாடான இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தியிருப்பதாகவும்இ 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால் அவர்கள் பலமிழந்து செல்வதாகவும் அந்தச் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கானும் விதம் அவர்களிடம் குவிந்து கிடக்கும் கள்ளப் பணத்தில் அதி நவீன ரானுவ தளவாடங்கள் கடத்திக் கொண்டு வந்து தங்களது மறைவிடத்திலும், தங்களது கோட்டை என்று சொல்லக் கூடிய கிளிநொச்சிப் போன்ற பகுதிகளையும் பலப்படுத்திக் கொள்வார்கள் அதனால் இலங்கை ரானுவம் அவர்களது கோட்டையை நீண்ட காலமாக நெருங்காமல் விட்டு வைத்துக் கொண்டே வந்தது. அவ்வாறு புலிகளுடைய கோட்டை என்று சொல்லக் கூடிய பகுதிகளில் ரானுவம் நெருங்காது என்ற நம்பிக்கையில் பலபாகங்களிலிருந்தும் கிளிநொச்சியை நோக்கி பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பயணித்து வந்து குவிந்ததால் இன்று அப்பாவி மக்கள் இலங்கை ரானுவத்துடைய நீண்ட நாள் இலக்குக்கு கொத்தும் குலையுமாக இரையாகி வருகின்றனர்.


கிளிநொச்சிக்கு 10ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்- கிளிநொச்சி அரசாங்க அதிபர்


கடந்த சில வாரங்களாக வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் இராணுவ நடவடிக்கைகளால் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பத்தாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து ஏழாயிரம் குடும்பங்களும்இ முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்களும்இ கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பது குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வடமேற்கேயுள்ள பூநகரி பிரதேசத்திலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம்இ இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வன்னியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்வு
கடந்த சில வாரங்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான் தாக்குதல்களால் பெருமளவானர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் வவுனியாவிலிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக மிகவும் குறைந்தளவான நிவாரணப் பொருள்களே வன்னிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுவதாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
'இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை நோக்கி இடம்பெயர்ந்தள்ளனர். இவர்களைக் கண்காணிப்பதற்கு அங்கு யாரும் இல்லை' என யாழ் ஆயர் கவலை வெளியிட்டுள்ளார்


பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பயங்கரவாத புலிகளிடம் குவிந்து கிடக்கும் முறையற்று ஈட்டிய பொருளாதாரமும், அவர்களை கண்மூடி ஆதரிக்கும் கலைஞர், வைகோப் போன்ற அரசியல்வாதிகளும், இனவெறிப் பிடித்த பிற்போக்குவாத பத்திரிகைகளுமே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அப்பாவி மக்கள் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணகர்த்தாவாகயிருக்கும் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆணந்த விகடன் என்ற தரம் தாழ்ந்த சினிமாப் பத்திரிக்கை தமிழக மக்களிடத்தில் புலிகள் அமைப்பிற்கு ஆதரவா ? எதிர்ப்பா ? தமிழீழத்துக்கு ஆதரவா ? எதிர்ப்பா ? என்ற கருத்து கணிப்பு நடத்தி எரிகின்ற நெருப்பில் எண்ணெயை வார்த்து ஊதி விட்டிருக்கின்றது

தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25 ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44ம- தடையை நீக்க வேண்டும்- 47.65 'ஆனந்த விகடன்' கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான 'ஆனந்த விகடன்' தெரிவித்துள்ளது. ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்

மண்ணின் மைந்தர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டால் சிதறச்செய்து உலக அளவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய அரக்கர்களுடைய அமைப்புக்கு கருத்து கணிப்பு என்றப் பெயரில் அதிக வாக்கிருப்பதாக கூறி பயங்கரவாதிகளுக்கு வெறியேற்றி விடுவது அவர்களது இனவெறியையும், மொழிவெறியையும் காட்டவில்லையா ?


காத்தான்குடி பள்ளிவாசலில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்திய போது வாய் திறக்காத விகடன், 24 மணிநேரம் கெடுவிதித்து யாழ்பான முஸ்லிம்களை துப்பாக்கி முணையில் விரட்டி அடித்தபொழுது வாய்திறக்காத விகடன் இன்று பயங்கரவாத புலிகள் தனது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதை அறிந்து அவர்கள் உற்சாகத்துடன் இலங்கை ரானுவத்துடன் மோதுவதற்காக இனவெறியில் நடத்தப்பட்ட கருத்துக கணிப்பாக தெரிய வில்லையா ?   இவர்களுடைய இந்த போக்கு இலங்கையில் அழிக்கப்பட்டு வரும் அப்பாவி தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தானதே !

உலகின் பலநாடுகளில் விடுதலைப் புலிகளுடைய உண்மை நிலை அறிந்து அவர்களுடைய கொலைவெறி இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் நம்முடைய பிரதமர் ஒருவரை அவர்களால் இழந்தும் மொழிவெறியில் அவர்களை ஆதரிப்பது இன்னும் இலங்கை தமிழின மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு  ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை ஆஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் ஆஸ்திரேலியா விரும்புகிறது.

இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்' என ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இம்முறை ஆஸ்திரேலியாவும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலரை ஆஸ்திரேலியா காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

எந்த தமிழ் மக்களுக்காக தனிநாடு கோரிக்கையை முன்வைத்ததாக கூறுகின்றார்களோ  அவர்களை பிறந்த நாட்டிலும் வாழ விடாமல் அடைக்கலம் புகுந்த அந்நிய நாடுகளிலும் வாழ விடாமல் மேற்கானும் பயங்கரவாதிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளனர். சிந்தியுங்கள் !

மற்ற எந்த மாநிலத்தையும் விட தமிழகமே எனக்கு பிடித்த மாநிலம் அதில் எனக்கு பகாதுகாப்பு தேவை இல்லை என்றுக் கூறி வந்த பிரதமர் ராஜீவ் காந்தியை மனித குண்டமாக மாறி அவருடைய உடலை சல்லடையாக்கினார்களே பாவிகள் ! சிந்தியுங்கள்.

  • விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழர்களுக்காக போராடுவதாக இருந்தால் அப்பாவி தமிழர்கள் ரானுவத்தினரால் பாதிக்கப்பட்ட பொழுது முறையற்று ஈட்டிய பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு சிலவற்றை கொடுத்துதவாதது  ஏன் ? சிந்தியுங்கள் !

  • அதேப்போன்று விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழர்களுக்காக போராடுவதாக இருந்தால் அப்பாவி தமிழர்கள் ரானுவத்தினரால் பெருமளவு கொல்லப்படும்போது எங்களால் அதிகமான மக்கள் கொல்லப்படுவதால் இன்று சரணடைகிறோம் என்றுக்கூற முன்வாராதது ஏன் ? சிந்தியுங்கள்

  • தமிழனக் காவலர்(?) கலைஞர் அவர்களே !
  • விடுதலைப்புலிகளின் ரெத்தத்தின் ரெத்தமான வைகோ அவர்களே !
  • இன்னும் பிற அரசியல்வாதிகளே !
  • சினிமா நடிகர் நடிகைகளே !
  • விடுலைப்புலிகளுடைய அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் பத்திரிக்கைகளே ! 

உங்களுடைய நோக்கம் அப்பாவி தமிழர்களை அழிவிலிருந்து மீட்பதாக இருந்தால் ரெத்தம் சிந்தும் தமிழின மக்களின் மீது இரக்கம் இருந்தால் ? அனுதாபம் இருந்தால் ? பயங்கரவாத புலிகளை ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு சரணடையச் சொல்லுங்கள்.

இலங்கை அரசே போர் நிருத்தம் செய் !  என்றக் கோஷத்தை மாற்றி
புலிகளே சரணடை ! என்றக் கோஷத்திற்கு மாருங்கள்.

சரணடைய மறுத்தால் ?

இந்திய ரானுவத்தை இலங்கைக்கு அனுப்பி இலங்கை ரானுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் கோரிக்கையை முன்வையுங்கள் இதுவே அப்பாவி தமிழர்களுக்கு நிம்மிதி பெருமூச்சை ஏற்படுத்தும் இதைத் தான் ராஜபக்சே கூறுகிறார்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் போக்கு உங்களிடத்தில் தொடரந்து நீடித்ததென்றால் விடுதலைப் புலிகளிடம் குவிந்து கிடக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு மறைந்திருந்து தொடரந்து தாக்குவார்கள் அவர்கள் ஒவ்வொரு முறை தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அப்பாவி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மொத்தமாக துடைத்தெறியப்படுவார்கள்.

இன்று உலகில் அநியாயமாக சிதைக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை முதலிடத்திற்கு வந்து விடும் அபாயம் ஏற்படலாம்.  

முஸ்லிம் சகோதரர்களே ! முஸ்லிம் அமைப்புகளே  !
இலங்கை ரானுவத்தினரால் கடும் தாக்குதலுக்குள்ளாகும் அப்பாவி தமிழர்களுக்காக நிதி திரட்டி அனுப்புங்கள்.

  • யாழ்பானத்திலிருந்து 24 மணிநேரம் கெடுவிதித்து முஸ்லிம்களை விரட்டி அடித்தது நம் சகோதர ஹிந்துக்கள் அல்ல ! பயங்கரவாத புலிகளாவார்கள்.

  • அபயமளிக்கும் பள்ளிவாசலில் தக்பீர் கூறி இறைவனிடம் ஐக்கியமாகிக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளியது நம் சகோதர ஹிந்துக்கள் அல்ல ! பயங்கரவாத புலிகளாகும் .
பயங்கரவாத புலிகளை வல்ல இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதரர்களுக்காக உதவிக்கரம் நீட்டுவோம்.

அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தரக்கூடியது, கடினமானது. திருக்குர்ஆன் 11:102



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ لِلّهِ شُهَدَاء بِالْقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ {8}

5:8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.



கலைஞரிடம் நமது கேள்வி ?

தமிழக முதல்வர் கலைஞர் கருனாநிதி அவர்கள் தமிழீழ பின்னடைவின் காரணம் குறித்து முரசொலியில் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார் அதை தட்ஸ் தமிழில் வாசித்தோம்.

பிரபாகரன் எடுத்த அவசர முடிவுகளே ஈழத் தமிழர்களுடைய எதிர்காலம் சூன்யமாகிப் போனது என்று சிலப் புள்ளி விபரங்களுடன் எழுதி இருந்தார் யாருக்கும் அதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

2003ல் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தை அவரால் புறக்கனிக்கப் பட்டது. 
2005ல் டோக்கியோவில் நடந்த பேச்சு வார்த்தை புறக்கனிக்கப்பட்டது என்று புள்ளி விபரத்துடன் தேதி வாரியாக எழுதி இருந்தார். 

அத்துடன் தமிழீழப் போராட்டக் குழுவில் ஆரம்ப காலத்தில் இணைந்தவர்கள் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றவர்களை அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்களுடைய பட்டியலை தேதி வாரியாக புள்ளி விபரத்துடன் எழுதி அவர்களுடைய மனைவி மக்களை கையேந்த விட்டார் என்று மிகவும் அனுதாபத்துடன் எழுதி இருந்தார்.

முறையானப போர் தந்திரம் வகுக்காமல் போர் முனையில் அநியாயமாக அப்பாவித் தமிழர்கள் சிஙகளப் படையால் கொன்றொழிக்கப்பட்டனர் அதனால் அவர்களுடைய வாரிசுகள் அனாதைகளாக்கப்பட்டனர் என்று கண்ணீர் மல்க எழுதி இருந்தார் நாமும் அதைப் படித்து கண்களை கசக்கிக் கொண்டோம்.

 இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்; டெலோ ஸ்றீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்; பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்; தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்; டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்; தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் - 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக - நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல - முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் - நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் - நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து - தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் - தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.  இவ்வாறு எழுதி இருந்தார். முழுமையாகப் படிக்க   கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.         

http://thatstamil.oneindia.in/news/2009/11/18/ltte-s-hasty-decisions-be-blamed.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29

அவரிடம் நமது கேள்வி ?

பிரபாகரனால் பாதிக்கப்பட்டவர்களை புள்ளி விபரத்துடன் தேதி வாரியாக குறிப்பிட்டு எழுதிய கலைஞர் அவர்களே !

பிரபாகரனால் பாதிக்கப்பட்டவர்களின் துரோகப் பட்டியலில்

  1. அவ்வப்பொழுது முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று வழிப்பறி செய்ததையும் அதை எதிர்ப்பர்களை ஈவிறக்கமின்றி சுட்டுப் பொசுக்கியதும்.

  1. உலகமேப் பார்த்து இவர்கள் இத்தனை அரக்கர்களா ? என்று விமர்சிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து காத்தான்குடி பள்ளிவாசலில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் பிரபாகரனின் உத்தரவால் பயங்கரவாத புலிகளால் கொடூரமாக சுட்டு வீழ்த்தப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் அவர்களுடைய மனைவி மக்களை அனாதைகளாக்கி விட்டத் துயரத்தை பற்றி தாங்கள் வாய் திறக்காதது ஏன் ? அது சரி தான் என்று சொல்ல வருகின்றீர்களா ?

  1. பிரபாகரனின் உத்தரவால் 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டு யாழ்பானத்திலிருந்து முஸ்லிம்கள; அவர்களுடைய வீடு> வாசல்களை> கால்நடைகளை> நிலபுலன்களை> தோட்ம்> துறவுகளை கொள்ளையடித்துக் கொண்டு பிறந்த நாட்டில் 24 மணி நேரத்தில் அகதிகளாக்கப்பட்டுத் துப்பாக்கி முணையில் விரட்டி அடிக்கப்பட்ட கொடூரத்தைப் பற்றி வாய் திறக்காதது ஏன் ? அது சரி தான் என்று சொல்ல வருகின்றீர்களா ?

தொப்பி போட்டுக் கொண்டு சேப்பாக்கத்தில் ஓட்டுக் கேட்கும் போது மட்டும் தான் உங்களுக்கு முஸ்லீம்கள் ஞாபகம் வருமா ?

அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் நீங்கள் எழுதும் வரலாற்றுப் பிண்ணனிகளில் முஸ்லீம்கள் ஞாபகம் வராதா ?

அல்லது முஸ்லீம்களையும் அதில் இணைத்து எழுதினால் மதவாதிகளின் ஓட்டுக்கள் சிதறி விடும்; என்ற அச்சமா ?

இதனால் தான் எந்த அரசியல் வாதியானாலும் சரி நம்மிடம் (முஸ்லீம்களிடம்) ஓட்டுக் கேட்டு வந்தால் இந்திய அரசியல் சாஸன சட்டம் நமக்கு வழங்கியதை முறையாக எழுத்துப் பூர்வமாக கேட்டு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம் என்றுக் கூறுகின்றோம்.


5:8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு> நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க> உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்