திங்கள், ஏப்ரல் 16, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

இலங்கைக்கு எதிரான தீர்மாம் வெற்றி பெற்றது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன.

இனிவரும் காலங்களிலாவது ராணுவம் அப்பாவி மக்கள் மீது இது போன்று வரம்பு மீறுவது ஓரளவு குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் அமையாது ஐ.நா.வில் இயற்றப்படும் மனித உரிமை சம்மந்தமான சட்டங்கள் நெறிமுறைகள் அனைத்தும் பிற நாட்டவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவுக்கு மட்டும் கிடையாது இல்லை என்றால் இலங்கையை விடாது விரட்டிய அமெரிக்கா தனது ராணுவம் ஈராக்கின் அப்பாவி மக்கள் மீது வரம்பு மீறி அட்டூழியம் புரிந்ததற்காக கடும் நடிவடிக்கையை மேற்கொண்டிருக்கும் அல்லது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலாவது அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிருத்தி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கும் அதற்கு அபுகிரைப் சிறைச்சாலை சித்ரவதை ஒன்றுப் போதுமானதாகும் மீதமுள்ளவைகள் இந்த கட்டுரையில் பட்டியல் இட முடியாத அளவு நீளமானதாகும்)

கண்களை கசியச் செய்யும் நிகழ்வுகள்.
இலங்கையின் அப்பாவி மக்கள் (நிராயுதபாணிகள்) மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்கள் காண சகிக்காதது.

அப்பாவி தமிழர்களின் மீதான இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்த்த யாருடைய கண்களும் கசியாமல் இருக்காது அதனால் தான் அதைப்பார்க்க சகிக்காமல் கலைஞர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 27-4-2009 அன்று கடற்கரையில் அண்ணா சமாதி அருகில் இரண்டு கூலர்களை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்கி விட்டார்.

இன்று கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அறிவித்துள்ளார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றும் கூறுகிறார் (அரசியல் கூத்து).

மீண்டும் புலிகள் வரள மாட்டார்களா ?
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி இந்த ஆதரவு தீர்மா
னத்தால் மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.சபையில்  எழுப்பியக் கேள்வி ஓட்டளித்த நாடுகளை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

காரணம் போருக்கு முன்னும் பின்னும் புலிகளில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகள் போல் தப்பிச் சென்று விட்டனர் இவ்வாறு சென்றவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல asies பத்திரிகை கடந்த வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியதும் நினைவிருக்கலாம்.

இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காரணம் கூறியது.

இது ஒரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக 2011 அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

அதனால் இலங்கைக்கான ஐ.நா தூதரின் கேள்வி சிந்திக்கக் கூடியது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இது விஷயமாக சிந்தித்து இலங்கை அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் செல்லாக் காசான புலிகள்
தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் நடத்திய கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டு மக்கள் அப்பொழுதே அவர்களை வெறுத்து விட்டனர் (ஜெயலலிதா,சோ உட்பட).

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர்களும் கூட புலிகளின் கொடூர குணத்தை அறிந்து அவர்களை விட்டு விலகியே இருந்தனர் ஆனாலும் இலங்கை ராணுவத்தின் நெருக்குதலை அறிந்த புலிகள் இந்த தடவை ராணுவம் நம்மை சும்மா விடாது என்பதை அறிந்து பல பகுதிகளிலிருந்தும் மக்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று தங்களுக்கு கேடயமாக்கினர். அப்பாவி தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். 

புலிகள் போரில் ஒடுக்கப்படுவதற்கு முன்னரே உலகம் முழுவதும் புலிகளுக்கான ஆதரவு குரல் ஒய்ந்து விட்டது இந்தியாவில் மட்டும் பிரபாகரனை இரகசியமாகச் சென்று சந்தித்து வந்த வை.கோ போன்றவர்களினால் அவ்வப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது இதில் புதிதாக சீமான் இணைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் வெளிநாட்டில் வாழக்கூடிய புலிகள் ஆதரவு அமைப்பினர் பொருளாதார ரீதியில் உதவி வருகின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கனடாவில் உள்ள கர்நாடக தமிழர் பேரவை அமைப்பினர் இந்தியா ஓட்டளித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் இலங்கை மக்களுக்கான மறுவாழ்வு கிடைக்கும் வரை இந்தியாவில் போராட்டத்தை கடந்த காலத்தைப் போலவே வீரியப்டுத்துங்கள் என்று அறிவித்து உள்ளது.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி மீண்டும் புலிகள் வளர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள் என்று இலங்கைக்கான ஐ.நா உறுப்பினர் ஐ.நா.வில் கேள்வி எழுப்பியது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. 

கொலைவெறியும், இரத்த தாகமும்.
புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள். 

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள். 


தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.


1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கி
டிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட் முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 
 

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.

இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கு
ம் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் டுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில்
மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

பு
லிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது.

4:168,169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழி காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

வியாழன், மார்ச் 22, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....




விடுதலைப் புலிகளின் பரினாமம்.

பயங்கரவாதப் புலிகளின் தலைவன் பிரபாகரன் கொல்லப்படடதும் (கொல்லப்படவில்லை என்று ஆனித்தரமாக வைகோவும், நெடுமாறனும் கூறி வருகின்றனர்.) இத்துடன் புலிகளின் அட்டூழியம் ஒழிந்தது அப்பாடா என்று இலங்கை அரசும், அப்பாவி மக்களும் நிம்மதிப் பெருமூச்சி விட்டனர். ஆனால் அது தற்காலிக சந்தோஷம் தான் என்பதை சமீப கால அவர்களின் நவடிக்கை நிரூபித்து வருகிறது. 

தனி ஈழம் கோரும் இலங்கைத் தமிழர்களில் அதிகமானோர் ஆரம்பத்திலிருந்தே செல்வம் கொழிக்கும் ஐரோப்பா நாடுகளில் நிலைக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். அரசுக்கெதிரான கலகத்திலும், அரசு ராணுவத்தினருடனான யுத்தத்திலும் ஈடுபடும் ஒருப் பிரிவனர் மட்டுமே இலங்கை காடுகளில் கட்டமைப்பை எற்படுத்திக் கொண்டு பிரபாகரன் தலைமையில் போரிட்டு வந்தனர். பிரபாகரன் கொல்லப்பட்டு இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் போக மீதமிருப்பவர்களில் ஏராளமானோர் அகதிகள் போல் ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தனி ஈழம் கோரும் பிரிவினைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். 

கடந்த வருடம் புலிகளில் முக்கியமானோர் 500 பேர் அகதிகள் போல் கனடாவுக்குள் நுழைய முயன்றவர்களை கனடா அரசு கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியது நினைவிருக்கலாம். இவர்கள் கனடாவில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளுடன் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் புறப்படுவதாக தகவல் அறிந்தே கனடா அரசு இவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியது. 

இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் இலங்கையில் மீண்டும் ஒருப் போரை வக்கிரமாக நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக ஃப்ரான்ஸில் இயங்கும் பிரபல யுளுஐநுளு  எனும் பத்திரிகை அதிர்ச்சித் தகவலை இப்பொழுது வெளியிட்டுள்ளது. 
இதன் முதல் கட்ட முயற்சியாக இலங்கை சிறையில் உள்ள முன்னால் வெளி விவகார தொடர்பாளர் குமரன் பத்மநாதனை விடுவிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். குமரன் பத்மநாதன்  கடந்த 2009ல் தாய்லாந்து அரசால் கைது செய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமரன் பத்மநாதன் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழீழப் பிரிவினைவாதிகளை  சந்தித்து நிதித் திரட்டியும், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்பை வலுப்படுத்தியும் வந்தவர் என்பதால் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது போல் மீண்;டும் செயல்பட இவரையே தேர்ந்தெடுத்துள்ளனர் அதனால் இவரை விடுவிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது ஒருப் புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேலையில் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் புலிகள் சிறிது சிறிதாக விடுதலையாகி இறுதியாக அக்டோபர் 1 ம் தேதி 1800 புலிகளை விடுவித்து அவர்களின் வேலையை சுலபமாக்கி விட்டது இலங்கை அரசு.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டப் புலிகள் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மேற்காணும் கொலை வெறிப் யபிற்சி தமிழ்நாட்டில் முனைப்புடன் நடந்து வருவதாகவும் மேற்காணும் பத்திரிகை செய்தி கூறுகிறது.

இவர்கள் எல்லாம் திருந்தி மனிதர்களாக வாழவேண்டும் என்பதற்காக இவர்கள் கைது  செய்யப்பட்டதும் ஒரு குவான்டனாமோ சிறைப் போல அல்லது அபுகிரைப் சிறைப் போல அல்லாமல் ஏராளமான மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பயங்கரதவாதப் புலிகள் அனைவரையும் அதில் தங்க வைத்து பிரபல தொழில் நிபுனர்களைக் கொண்டு பல்வேறு மாதிரியான தொழிற்பயிற்சிகள் அளிக்கபட்டு ஒவ்வொருவரும் தங்களை சீர்திருத்தி வாழும்படிக் கூறி வெளியில் அனுப்பினார் ராஜபக்சே.

சமீபத்தில் யுத்தம் நடந்த நாடுகளின் வரிசையில் வெற்றி கொல்லப்பட்டவர்கள் எதிரணியிலிருந்து கைது செய்யப்பட்டவர்களை நடத்திய விதத்தில்; புலிகளுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட விதத்தில் ராஜபக்சே மிளிர்கிறார். ஆனால் புலிகளோ மனிதாபிமனாத்திற்கு அப்பாற்பட்டவள் என்பதை கடந்த காலங்களில் பலதடவை நிரூபித்தவர்கள். 

எது எப்படியோ இலங்கைத் தமிழர்கள் அப்பாடா என்று பெரு மூச்சுவிடுவதற்குள் அடக் கடவுளே என்று அலறும் அடுத்த நிலை உருவாகி வருவமு துரதிஸ்டத்திலும் பெரிய துரதிஸ்டம். வைகோ, சீமானுடைய அரசியல் கட்சி இதன் மூலமாக இன்னும் சூடு பிடிக்கலாம். 

 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்